புரோ கபடி போட்டி: குஜராத், பாட்னா அணிகள் வெற்றி

கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டிகளில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் பாட்னா அணிகள் வென்றன. முதலாவது போட்டியில் உத்தரப்பிரதேச அணியை குஜராத் அணி 25 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது. குஜராத் அணி 44 புள்ளிகளும், உபி அணி 19 புள்ளிகளும் எடுத்தன.

இரண்டாவது போட்டியில் பாட்னா அணி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 12 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாட்னா அணி 34 புள்ளிகளும், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 22 புள்ளிகளும், எடுத்தன

நேற்றைய லீக் போட்டிகள் முடிந்த பின்னர் குஜராத் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் டெல்லி அணி அதே 10 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் தமிழ் தலைவாஸ் மற்றும் பாட்னா அணிகள் தலா 6 புள்ளிகள் பெற்று மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் உள்ளன

Leave a Reply