shadow

புத்தாண்டு கொண்டாட்டம்: மது அருந்தி வாகனம் ஓட்டிய 263 பேர்களின் லைசென்ஸ் ரத்து

2019ஆம் ஆண்டின் புத்தாண்டு தினத்தை நேற்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஆயிரக் கணக்கான போலீசார் ஈடுபட்ட நிலையில் 162 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு விபத்தில்லா புத்தாண்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி சென்னையின் பல்வேறு பகுதிகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 263 பேர் போலீசிடம் பிடிபட்டனர்.

இதனையடுத்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஏற்கெனவே அறிவித்தபடி 263 பேரின் ஓட்டுநர் உரிமங்களையும் ரத்து செய்துள்ளனர்.

 

Leave a Reply