புதுவை முதல்வரின் தர்ணா போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
புதுவை ஆளுனர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் நாராயணசாமியுடன் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசி தனது ஆதரவை தெரிவித்தார். மேலும் போராட்டத்தின் காரணம் குறித்தும், போராட்டத்தின் தன்மை குறித்தும் கேட்டறிந்தார். இந்த போராட்டம் வெற்றி பெறுவதற்காக வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் நாராயணசாமியிடம் கூறினார்.
இதேபோல் புதுவை காங்கிரஸ் மேலிட பார்வையாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக், மேலிட தலைவர் சஞ்சய்தத் ஆகியோரும் நாராயணசாமியை தொடர்பு கொண்டு போராட்டத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
புதுவையில் ஆளுனர் மாளிகை முன் முதல்வர் தனது அமைச்சர்களுடன் இரண்டாம் நாளான் இன்றும் தனது தர்ணா போராட்டத்தை தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.