shadow

புதுச்சேரி ஆட்சியை கவிழ்க்க சதியா?

புதுவையில் தற்போது முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசியதாக தகவல்கள் வெளிவந்தன.

குறிப்பாக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தீப்பாய்ந்தன், விஜயவேணி ஆகியோர்களிடம் நாராயணசாமி ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசியதாக அதிமுக எம்.எல்,ஏக்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்த விசாரணையில் அதிமுக, என்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பேரம் பேசியது தெரியவந்துள்ளதாகவும், இதையடுத்து அதிமுக, என்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் பணியில் சட்டபேரவை செயலகம் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply