புதிய ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு. அரசியல் நெருக்கடிகளை சமாளிப்பாரா?
தமிழகத்தின் புதிய ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் சற்று முன்னர் பதவியேற்றார். ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் கிரிஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரசியல் நெருக்கடி, குழப்பங்கள் இருந்து வரும் நிலையில் பல்வேறு பிரச்சனைகளை ஆளுனர் எவ்வாறு கையாள போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.