shadow

பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதிமாறன் ஆஜர்

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்தபோது அவரது வீட்டில் இருந்த 323 பி.எஸ்.என்.எல். தொலை பேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கில், தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரிஷியன் ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனால் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் இன்று ஆஜரானார். இன்றைய விசாரணை குறித்த தகவல் இன்னும் சில நிமிடங்களில் தெரியவரும்

Leave a Reply