அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும்- அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வு உள்பட பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மட்டும் கடைசி நேரத்தில் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது

ஒரு சில பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடக்கவில்லை என்றாலும் பிளஸ் டூ தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சற்று முன்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் ரிசல்ட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply