shadow

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மாயம்! மனைவி புகாரால் பரபரப்பு

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகிய பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணா நகர் காவல்நிலையத்தில் திடீரென புகார் அளித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தகவலை அறிந்த பவர்ஸ்டார் தனது மனைவியை தொடர்புகொண்டு, தான் ஊட்டியில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து அவரது மனைவி ஜூலியும் ஊட்டிக்குச் சென்று விட்டார்.

இந்நிலையில் தனது கணவர் காணவில்லை என்ற புகாரை ஜூலி திரும்பப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பவர்ஸ்டார் சீனிவாசன் ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கி கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply