பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி கொலை: கள்ளக்காதலால் கணவரே கொலை செய்தாரா?

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி ஒருவரை கள்ளக்காதல் காரணமாக அவரது கணவரே கொலை செய்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து கொண்டிருந்த அனிதா சிங் என்பவர் உடன் பணி புரிந்து கொண்டிருந்த ஒருவருடன் கள்ளக்காதலில் இருந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இதனை கண்டுபிடித்த அவரது கணவர் ரவீந்திர், மனைவியை விருந்துக்காக தனது நண்பர் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்து சென்று, உணவில் மயக்க மருந்து கலந்து அதன் பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிகிறது

இது குறித்து போலீசார் செய்த விசாரணையில் 15 நாட்களுக்குப் பின்னர் அனிதா சிங்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு அதன் பின் விசாரணை நடத்தியதில் கணவரே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். தனது மனைவி கள்ளக்காதலில் ஈடுபட்டு இருப்பார் என்ற சந்தேகத்தில் தான் கொலை செய்ததாகவும், இந்த கொலைக்கு தனது நண்பரும் உதவி செய்ததாகவும் ரவீந்தர் வாக்குமூலம் கொடுத்துள்ளதை அடுத்து ரவீந்தர் மற்றும் அவரது நண்பர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Leave a Reply