shadow

பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கடிதம்! கோரிக்கை என்ன?

மிழக பாஜக தலைவர்களுடன் அடிக்கடி கருத்து மோதலில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசன் நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி ஒரு முக்கிய கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில், நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஆள் கடத்தல் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது கடிதத்தில் கமல் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

Leave a Reply