shadow

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே

கடந்த சில வாரங்களாக இலங்கை அரசியலில் பெரும் குழப்பநிலை இருந்த நிலையில் சமீபத்தில் வெளியான அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் தற்போது ஓரளவு குழப்பம் குறைந்துள்ளது.

இதன்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே. அவர் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனாவிடம் வழங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது. புதிய பிரதமரை, சிறிசேன நியமிக்க, இடமளிப்பதற்காகவே பதவி விலகியுள்ளதாக ராஜபக்சே தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமர் பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரணிலை மீண்டும் பிரதமராக விடமாட்டேன் என அதிபர் சிறிசேனா கூறிவருவதால் குழப்பநிலை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது.

 

Leave a Reply