பிரதமர் நினைத்தால் திமுக பஸ்பம் ஆகிவிடும்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘டெல்லிக்கு செல்கிறோம், நாடாளுமன்றத்தையே முடக்கிவிடுவோம், மோடியை தடுத்துவிடுவோம், ஆட்சியை உண்டு, இல்லை என செய்துவிடுவோம் என திமுகவினர் கூறினர். அவர்களால் என்ன செய்துவிட முடியும்? மோடி நினைத்தால் திமுக கழிவாகிவிடும், பஸ்பமாகிவிடும்.
நாங்கள் நினைத்தால் திமுக என்னும் கட்சியே இருக்காது. அந்த அளவுக்கு எங்களிடம் வலு உள்ளது. இந்த நாட்டின் பிரதமரை முன்மொழியும் இடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்”, என ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அவரகளின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.