பிரதமர் நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஏன் பாடவில்லை? சென்னை ஐகோர்ட்டில் மனு
கடந்த சில நாட்களாகவே அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடாமல் நடந்து வருவதை சமூக ஆர்வலர்கள் பலர் கண்டித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் பங்கேற்றார். ஆனால் பிரதமர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசியக்கீதம் பாடப்படவில்லை. இதுகுறித்து வேம்பு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வேம்பு என்பவர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
Leave a Reply
You must be logged in to post a comment.