பிரதமருக்கு எதிராக கோஷம் போட்டவர்கள் போலீசை கண்டதும் தப்பியோட்டம்
ஒவ்வொரு முறை பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அவருக்கு கருப்புக்கொடு காட்டுவது, கோபேக் மோடி’ என டுவிட்டரில் டிரெண்ட் செய்வது, பிரதமருக்கு எதிராக கோஷமிடுவது என்பது திராவிட கட்சிகளின் வழக்கமான செயல்பாடுகளில் ஒன்று
இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று சென்னை வந்துள்ள நிலையில் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை கிண்டியில் போராட்டம் நடத்த வந்த மாணவர் காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர், கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது அங்கு வந்த காவல்துறையினரை கண்டதும், அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
வீராவேசமாக போராட்டம் செய்தவர்கள் போலீசார்களை கண்டதும் ஓடிவிட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.