shadow

பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விட்ட கட்சிகளுக்கு தடையா?

பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வரும்போதெல்லாம் மதிமுக உள்பட ஒருசில கட்சிகளும் அவருக்கு கருப்புக்கொடி காட்டுவதும், கருப்பு பலூன்களை பறக்கவிடுவதுமாக உள்ளன

தமிழகத்தை அடுத்து ஆந்திரா உள்பட ஒருசில மாநிலங்களிலும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது. இந்த நிலையில் பிரதமருக்கு எதிராக கருப்பு பலூன் பறக்க விட்ட கட்சிகளை தடை செய்ய கோரி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்லது

மதுரை ஹைகோர்ட் கிளையில் முகமது ரக்வீ என்பவர் இதுகுறித்த வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

Leave a Reply