பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகம்: கமல் எடுத்த அதிரடி முடிவு

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி வரும் 2021ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க அகில இந்திய அளவில் புகழ்பெற்ற பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்து வெற்றி பெறச் செய்த நிறுவனம் என்பதும் இந்த நிறுவனம் கொடுத்த ஆலோசனையின் பேரில்தான் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட பலர் வெற்றி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தமிழகத்தில் பிரசாந்த் கிஷோர் நிறுவனத்துடன் மக்கள்நீதிமய்யம் ஒப்பந்தம் செய்துள்ளதால் வரும் தேர்தலில் கமலஹாசன் வெற்றி பெற்று முதல்வர் ஆவார் என்று அவரது கட்சியினர் கூறி வந்தனர்

இந்த நிலையில் அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ள மக்கள் நீதி மய்யம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுவரை வகுத்த திட்டங்களில் திருப்தி இல்லாததால் கமல்ஹாசன் அதிருப்தி என தகவல் வெளியாகியுள்ளது

Leave a Reply