பிடிபட்டது லலிதா ஜூவல்லரியில் கொள்ளை போன நகைகள்: பெரும் பரபரப்பு

திருச்சி லலிதா ஜூவல்லரியில் சமீபத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அடுத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூரில் வாகன தணிக்கையின் போது காவல்துறையினர் பிடியில் சிக்கிய நபரிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நகைகளில் இருந்த பார் கோடுகளை ஒப்பிட்டு பார்த்தது மூலம் லலிதா ஜுவல்லரி நகை என்பது உறுதியானது எனத் தெரிய வந்துள்ளது.

அப்படியென்றால் இவை கொள்ளையடிக்கப்பட்ட நகைகளா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் திடுக்கிடும் பல விஷயங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

Leave a Reply