பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ஹீரோவாக மாறிய கவின்

பிக்பாஸ் வீட்டில் இருந்து ரூபாய் ஐந்து லட்சத்திற்கு கவின் வெளியேறினார் என்று கூறப்பட்டாலும் அவரது தியாக மனப்பான்மை உண்மையில் அவரை ஹீரோ ஆகி விட்டது

வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று சக போட்டியாளர்கள் ஐவரும் கட்டாயப்படுத்தினர். குறைந்தபட்சம் இந்த வாரம் மட்டும் இருந்து விட்டு போகலாம் என்று சாண்டியும் லாஸ்லியாவும் அதிகபட்சமாக எடுத்துரைத்தனர்

ஆனால் எடுத்த முடிவில் உறுதியாக இருந்த கவின் இன்று வெளியேறி விட்டார். அவர் வெளியேறியது பணத்திற்காகவா? நட்புக்காகவா? தன்னலமா? சுயநலமா? என பல காரணங்கள் சமூக வலைதளங்களில் அலசப்பட்டு வந்தாலும், அவர் உண்மையில் எதற்காக அவர் வெளியேறினார் என்பதை கடைசிவரை அவர் வெளிப்படையாக கூறவில்லை

இருப்பினும் அவர் தனது குடும்பத்தாரின் பணத்தேவையை பூர்த்தி செய்யவே வெளியேறி இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காரணமே தன்னுடைய கடனை அடைக்கவே என்று கூறியிருந்த நிலையில் இந்த ஒரு வாய்ப்புக்காக அவர் இத்தனை நாள் காத்திருந்ததாகவும், அந்த வாய்ப்பு வந்தபின் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர் அதை பயன்படுத்திக் கொண்டதாகவும் தான் நினைக்க முடிகிறது

பணத்திற்காக அவர் வெளியே சென்று இருந்தாலும் அவருடைய நட்பு மற்றும் காதல் உண்மையானதுதான் என்பதை அவர் வெளியேறிய கடைசி நிமிடங்களில் தெரிந்தது

Leave a Reply