பிக்பாஸில் பங்குபெற படுக்கைக்கு செல்ல வேண்டுமா? தொகுப்பாளினி ஆவேசம்

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகைகள் தங்களை பலர் வாய்ப்பு தருவதாக ஏமாற்றி படுக்கைக்கு அழைத்ததாக குற்றஞ்சாட்டி வரும் நிலையில் தற்போது ஒரு டிவி தொகுப்பாளர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறவும் படுக்கைக்கு அழைத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் 3ஆம் பாகம் போலவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரபல டிவி தொகுப்பாளினி ஸ்வாதி ரெட்டிக்கு அழைப்பு வந்தது.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் தங்களை திருப்திபடுத்த வேண்டும் என பிக்பாஸ் நிர்வாகத்தினர் தன்னிடம் தெரிவித்ததாகவும், அதனால் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் ஸ்வாதி ரெட்டி திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.

Leave a Reply