பிக்பாஸில் கிடைத்த சம்பளம் ரூ.38 லட்சம்: ஒரே நாளில் கடனை அடைத்த கவின்


பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான கவின் பல்வேறு சோதனைகளிலும் காதல் தோல்விகளையும் சமாளித்து 95 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்துவிட்டார். கடைசியில் பிக்பாஸ் ரூபாய் 5 லட்சம் அறிவித்ததும் கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற தயாராகிவிட்டார்.

அவருடைய பிளான் என்ன என்பது இன்னும் யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியால் கவினுக்கு மொத்தம் ரூ.38 லட்சம் சம்பளம் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

பிக்பாஸ் வீட்டில் அவர் இருந்த 95 நாட்களுக்கு உரிய சம்பளம் ரூ33 லட்சம் என்றும், வெளியேறும்போது கிடைத்த சம்பளத்தையும் சேர்த்து மொத்தம் அவருக்கு ரூ.38 லட்சம் கிடைத்துள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது

இந்த பணத்தை வைத்து அவருடைய பெற்றோர்களின் கடனை அவர் ஒரே நாளில் அடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இனி கவினும் அவருடைய குடும்பத்தினர்களும் தலைநிமிர்ந்து வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply