பிகில் படத்திற்கு தியேட்டரில் இரண்டே பேர்: ரூ.200 கோடி வசூல் செய்தது உண்மையா?
#தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்திற்கு நேற்று இரவு காட்சியில் திரையரங்கு ஒன்றில் இரண்டே இரண்டு பேர் மட்டும் வந்திருந்ததால் காட்சி ரத்து செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படம் கடந்த தீபாவளி விருந்தாக அக்டோபர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப்படம் ஐந்தே நாட்களில் ரூபாய் 200 கோடி வசூலை நெருங்கியதாக விநியோகிஸ்தர்கள் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
இந்த நிலையில் படம் வெளியான ஆறாவது நாளே சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் நேற்று இரவு ஐந்து 10.45 மணி காட்சிக்கு வெறும் இரண்டு பேர் மட்டுமே வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது
ஒரு மாஸ் நடிகரின் திரைப்படம் வெளியான ஐந்தே நாட்களில் தியேட்டர்களில் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது தமிழ் திரையுலக வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் இந்த படம் உண்மையிலேயே ரூபாய் 200 கோடி வசூல் செய்ததா? என்ற சந்தேகத்தை தற்போது நெட்டிசன்கள் கிளப்பி வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.