பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் ஆர்யா! என்ன ஆச்சு இந்திப்படம்?
இயக்குனர் பா.ரஞ்சித், ‘பிர்சா முண்டா’ என்ற பாலிவுட் படத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான ஆரம்பகட்ட பணிகளை கடந்த சில மாதங்களாக செய்து வந்த நிலையில் திடீரென அந்த படத்தை தள்ளி வைத்துவிட்டு தமிழ்ப்படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.
மல்டிஸ்டார் படமாக அமையவுள்ள இந்த படத்தில் ஆர்யா ஹீரோவாகவும் ராணா மற்றும் சத்யராஜ் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. இந்த படத்தில் மேலும் ஒரு ஹீரோ நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.