shadow

பா.ஜனதாவின் தூக்கத்தை கெடுத்துவிட்டோம்: குஷ்பு

நேற்று வெளியான இரு மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்திருக்கும் சூழ்நிலையில் ராகுல்காந்தி நாகரீகமாக எந்தவித எதிர்மறை கருத்துக்களையும் கூறாமல் பாஜகவினர்களுக்கும், பிரதமர் மோடிக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்வதோடு நிறுத்திக்கொண்டார்.

ஆனால் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவின் வெற்றி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குஜராத்தில் பாஜக தத்தி தத்தி வெற்றி பெற்றுள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ள நிலையில், குஜராத் தேர்தல் முடிவு குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

‘‘குஜராத் தேர்தலில் ராகுல் காந்தி, தனி மனிதராக பா.ஜனதாவின் ஒட்டு மொத்த ராணுவத்தையும் எதிர்த்து நின்றார். இதன்மூலம் பா.ஜனதாவின் தூக்கத்தை காங்கிரஸ் கட்சி கெடுத்து இருக்கிறது. அவர்களுக்கு அதிர்ச்சியை அளித்து இருக்கிறோம். இது ஒரு நல்ல தொடக்கம்.’’

இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

Leave a Reply