சூரிய ஒளியில் இயங்கும் சலவைப்பெட்டி: திருவண்ணாமலை மாணவிக்கு பாராட்டு

சூரிய ஒளியால் இயங்கும் சலவைப் பெட்டியை திருவண்ணாமலை மாணவி வினிஷா என்பவர் கண்டுபிடித்துள்ளார்.

இவரது கண்டுபிடிப்பிற்காக ஸ்வீடன் நாட்டின் பெருமைமிகு விருது இவருக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் சூரிய ஒளியில் இயங்கும் சலவைப்பெட்டியை கண்டுபிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருக்கும் திருவண்ணாமலை மாணவி வினிஷாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

மேலும் இவரது பெயர் பாலசக்தி புரஷ்கார் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply