shadow

பாலகிருஷ்ணரெட்டி தண்டனை நிறுத்தி வைக்கப்படுமா? சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் தண்டனை விதித்த நிலையில் அவரது அமைச்சர் பதவியும் எம்.எல்.ஏ பதவியும் பறிபோனது.

இந்த நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சென்னை ஐகோர்ட்டில் பாலகிருஷ்ணரெட்டி தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தற்போது சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை நிறுத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ணரெட்டி தாக்கல் செய்துள்ள இந்த மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க கோரி நாளை உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது

 

Leave a Reply