பாராளுமன்ற தேர்தலில் முதல்வர் போட்டியா? பரபரப்பு தகவல்
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் குறிப்பாக அவர் பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இந்த தகவலை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் இது தொடர்பாக கூறியதாவது:-
கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் அவர் தீவிர கவனம் செலுத்துவார். வாரணாசி தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவோம்.
பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா, கோவாவில் போட்டியிடுவோம். உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் நிற்போம். அடுத்த மாதம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #AamAadmi #Kejriwal
Leave a Reply
You must be logged in to post a comment.