பாம்புகளை தொட்டுப்பிடித்து விளையாடிய பிரியங்கா காந்தி!

சோனியா காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியில் உள்ள பாம்பாட்டி சமூகத்தினர்களிடம் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்கள் கூடையில் வைத்திருந்த பாம்புகளை கையில் எடுத்து பயமின்றி விளையாடிக்கொண்டிருந்தார். இதுகுறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply