பாஜகவில் 5 தெலுங்கு தேச எம்பிக்கள்: அதிர்ச்சியில் சந்திரபாபு நாயுடு!

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி, தற்போது ராஜ்யசபா எம்பிக்களை இழக்கவிருப்பதால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி சந்திரபாபு நாயுடுவுக்கு கிடைத்துள்ளது

தெலுங்கு தேச கட்சியின் ராஜ்யசபா எம்பிக்களான வெங்கடேஷ், சுஜானா சௌத்ரி மற்றும் டி.ஜி.வெங்கடேஷ், ஒய்.எஸ்.சவுத்ரி, சி.எம்.ரமேஷ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் தெலுங்கு தேச கட்சிக்கு ராஜ்யசபாவிலும் எண்ணிக்கை குறைகிறது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் சாம்ராஜ்யம் கிட்டத்தட்ட முடிவடைவதாகவே அங்குள்ள அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply