shadow

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்: கோவாவில் பெரும் பரபரப்பு

கோவா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் திடீரென பா.ஜ.காவில் இணைந்துள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களான சுபாஷ் ஷிரோத்கர், மற்றும் தயானந்த் சோப்தே ஆகியோர் இன்று டெல்லியில் பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவைச் சந்தித்த பின்னர் தாங்கள் பா.ஜ.க.வில் இணைந்ததாக அறிவித்தனர். தாங்கள் இருவர் மட்டுமின்றி இன்னும் ஒருசில காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் பா.ஜ.க.வில் இணைய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மொத்தம் 38 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில் தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வுக்கு 14 உறுப்பினர்களும் காங்கிரசுக்கு 14 உறுப்பினர்களும் உள்ளனர். மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா ஃபார்வர்டு கட்சி ஆகியவற்றுக்கு தலா 3 உறுப்பினர்களும் 3 சுயேச்சை உறுப்பினர்களும் உள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு உறுப்பினர் உள்ளார்.

Leave a Reply