பாகிஸ்தான் ஜிந்தாபாத் என இளம்பெண் கூறியதற்கு ஸ்டாலின் தான் காரணம்: அதிர்ச்சித் தகவல்
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று நடைபெற்றது இந்த போராட்டத்தில் ஒவைசி எம்பி உள்பட பலர் கலந்து கொண்டு சிஏஏ சட்டத்திற்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறார்
அப்போது திடீரென மேடைக்கு வந்த கல்லூரி மாணவி ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அதன் பின்னர் அந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்து அவருக்கும் பாகிஸ்தான் அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பது தான் என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இளம்பெண் ஒருவர் கோஷம் போட்டதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தான் காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார். பொன் ராதாகிருஷ்ணன் அவர்களின் இந்த குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.