இந்தியாவுக்கு இணையாக பாகிஸ்தானிலும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள நிலையில் அந்நாட்டு ரசிகர்கள் மட்டும் வீரர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் தற்போது மிகப் பெரிய மைதானம் ஒன்று பாகிஸ்தானில் தயாராகி வருகிறது

பாகிஸ்தானில் உள்ள கராச்சி அருகே இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் தயாராகி வருகிறது. ரஃபி கிரிக்கெட் மைதானம் என்று அழைக்கப்படும் இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் பேர் உட்கார்ந்து போட்டியை ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கிரிக்கெட் மைதானத்தின் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த பணி முடிவடையும் நிலைக்கு வந்துவிடும் என்ரும் விரைவில் இந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply