பவர் ஸ்டார் சீனிவாசன் மகள் காவல் நிலையத்தில் திடீர் புகார்
நேற்று பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் செய்துவிட்டு பின்னர் அவர் ஊட்டியில் இருப்பதாக தெரிந்து கொண்டு புகாரை வாபஸ் பெற்றார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் பவர்ஸ்டார் சீனிவாசன் மகள் வைஷ்ணவி, தனது பெற்றோரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பவர் ஸ்டார் சீனிவாசன் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும், பவர் ஸ்டாரும் அவரது மனைவி ஜூலி-யும் ஊட்டியில் அடைத்து வைத்து மர்ம கும்பல் மிரடடுவதாகவும், தனது பெற்றோரை மீட்டு தாருங்கள் என்று மகள் வைஷ்ணவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.