பழத்துக்கு ஏன் ரகசியமாக பணம் கொடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஊரை ஏமாற்றுவதற்காக பழத்துக்காக பணம் தந்ததாக முதல்வர் பழனிசாமி கூறுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேற்று தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வருக்கு வாழைப்பழம் விற்கும் பெண்மணி ஒருவர் வாழைப்பழங்களை கொடுத்தார். அந்த வாழைப்பழத்திற்குத்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்தார்.

ஆனால் சில திமுகவினர் முதல்வர் வாழைப்பழம் வாங்கும் காட்சியை கட் செய்துவிட்டு முதல்வர் பணம் கொடுக்கும் காட்சியை மட்டும் சமூக வலைத்தளத்தில் பரப்பி, முதல்வர் ஓட்டுக்காக பணம் கொடுப்பதாக வதந்தி பரப்பிவிட்டனர்.

இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபோது, ‘ஊரை ஏமாற்றுவதற்காக பழத்துக்காக பணம் தந்ததாக முதல்வர் பழனிசாமி கூறுவதாகவும், பழத்துக்கு ஏன் ரகசியமாக பணம் கொடுக்க வேண்டும் வெளிப்படையாக தந்திருக்கலாமே? என்றும் கூறியுள்ளார். அந்த வீடியோவில் முதல்வர் ரகசியமாக இன்றி நேரடியாகத்தான் பணம் கொடுத்தார் என்பதை முக ஸ்டாலின் கவனிக்கவில்லை போல் தெரிகிறது

Leave a Reply