பள்ளி மாணவிகள் தொடர்ச்சியாக கர்ப்பம்: மாணவர்களுக்கு காண்டம் கொடுத்த பள்ளி நிர்வாகம்!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நகரில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வந்தது. இந்த பள்ளிகள் பல மாணவர்களும் மாணவிகளும் படித்துக் கொண்டிருக்கும் நிலையில் மாணவிகள் திடீர் திடீரென கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது

இதனையடுத்து பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் சேர்ந்து மாணவிகளின் கர்ப்பத்தை கலைக்க ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் மாணவி கர்ப்பம் அடையாமல் இருக்க பல்வேறு நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டது இதனை அடுத்து கடைசியாக பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக காண்டம் தருவது என்ற முடிவை பள்ளி நிர்வாகம் எடுத்துள்ளது

இதனால் மாணவிகள் கர்ப்பமாகி வருவது குறையும் என்று பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது

பள்ளி மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்பித்து பாலுறவு என்பது எந்த வயதில் நடக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தாமல் மாணவர்களுக்கு காண்டம் கொடுக்கும் முயற்சி என்பது மடத்தனமானது என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply