பல்வலிக்காக வாங்கிய மாத்திரையில் இரும்புக்கம்பி: அதிர்ச்சி தகவல்

மெடிக்கல் ஸ்டோரில் பல்வலிக்காக ஒரு இளைஞர் வாங்கிய மாத்திரையை பிரித்து பார்த்தபோது அதில் இரும்புக்கம்பி இருந்ததாக வெளிவந்துள்ள அதிர்ச்சி தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவையில் உள்ள ஒரு மெடிக்கல் ஸ்டோரில் இளைஞர் ஒருவர் பல்வலிக்காக ஒரு மாத்திரை வாங்கியுள்ளார். அந்த மாத்திரையை சாப்பிடுவதற்காக அதனை பிரித்தபோது அதில் ஒரு இரும்புக்கம்பி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே கடைக்காரரிடம் இதுகுறித்து புகார் கூறியுள்ளார். கடைக்காரர் சரியான பதில் கூறாததால் உடனடியாக செய்தியாளர்களை அழைத்த அவர் அந்த மாத்திரையை செய்தியாளர்களிடம் காட்டி தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் கோவை நகராட்சி அதிகாரிகளிடம் இதுகுறித்து புகார் அளிக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல்வலிக்காக மெடிக்கல் ஸ்டோரில் மாத்திரை வாங்கியவரின் பெயர் முஸ்தபா என்று தெரிய வந்துள்ளது

Leave a Reply