shadow

கொரோனாவின் தாக்கம் மீண்டும் உயர தொடங்கிய நிலையில் மீண்டும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கியது தமிழக அரசு.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் இன்று முதல் அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் மார்கெட் மற்றும் வணிக வளாகங்கள் அமைந்துள்ள 9 இடங்களில் அங்காடிகள் நாளை முதல் செயல்பட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.