பரோலில் வந்தார் இளவரசி! சசிகலா செய்தி சொல்லி அனுப்பியிருப்பாரா?
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கு இன்று தினகரனுக்கு எதிராக வெளிவந்துள்ள நிலையில் சசிகலாவுடன் சொத்துக்குவிப்பு வழக்கிற்காக சிறை சென்ற இளவரசி இன்று பரோலில் வந்துள்ளார்.
இளவரசியின் சகோதரர் உடல்நலமின்றி இருப்பதால் அவரை பார்ப்பதற்காக இளவரசி பரோலில் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தகுதி நீக்க வழக்கு தீர்ப்புக்கு பின் தினகரன் செய்ய வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த தகவல்கள் ஏதும் சசிகலா சொல்லி அனுப்பியிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
இளவரசிக்கு 15 நாட்கள் பரோலை பெங்களூர் பார்ப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.