பரமக்குடியில் 4 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தம்

பரமக்குடி பெண்கள் மேனிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறால் 4 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள வாக்காளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதிலும் இன்று பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக பத்து நிமிடத்தில் இருந்து மணிக்கணக்கில் வாக்குப்பதிவு தாமதமானது

இந்த நிலையில் தான் பரமக்குடி பெண்கள் மேனிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இயந்திரங்களை பழுதுநீக்கும் பணியில் தேர்தல் அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்

Leave a Reply