பப்ஜி ஆன்லைன் விளையாட்டு குறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் புகார்.

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள பப்ஜி ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் புகார் அளித்துள்ளது

பப்ஜி விளையாட்டிற்கு சிறுவர்கள், இளைஞர்கள் அடிமையாவதால் இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்து வருகிறது. ஒருசில மாநில அரசு இந்த விளையாட்டை தடையும் செய்துள்ளது

இந்த நிலையில் பப்ஜி விளையாட்டு இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி குற்றஞ்சாட்டியதோடு, இந்த இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது

Leave a Reply