shadow

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்களுக்கு இ-பதிவு தேவை இல்லை என்றும் செய்தி சேகரிக்க செல்லும் அவர்கள் தங்குதடையின்றி செல்லலாம் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது

பத்திரிகையாளர் மட்டுமின்றி மருத்துவர்கள் சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கும் இ-பதிவு அவசியமில்லை என்றும் அவர்கள் காவல்துறையினரிடம் தங்கள் அடையாள அட்டைகள் காண்பித்தால் போதும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது

இருப்பினும் மேற்கூறியவர்கள் தவிர மற்ற அனைவருக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு மாவட்டத்தில் செல்வதோ அல்லது சென்னையை சேர்ந்தவர்கள் சென்னைக்குள் செல்வதற்கு இ-பதிவு அவசியம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது