shadow

தேனி: சசிகலாவை நீங்க சந்தித்துப் பேச வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு கோரிக்கை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

பெரியகுளம் அருகே உள்ள தனது பண்ணை வீட்டில் ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை நடத்திய நிலையில் இந்த கோரிக்கை அவருக்கு வைக்கப்பட்டுள்ளது.
தனது அழைப்பை எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்தியதால் சசிகலாவை ஓபிஎஸ் விரைவில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது அழைப்பை எடப்பாடி பழனிசாமி உதாசீனப்படுத்தியதால் சசிகலாவை ஓபிஎஸ் விரைவில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேனி மாவட்டம் அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்ததை அடுத்து சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் புறப்பட்டுச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வைத்து ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசித்து வருகிறார். இந்நிலையில் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான், ஓ.ராஜா உள்ளிட்டோர் சசிகலாவுடனான சந்திப்பை இனியும் தாமதப் படுத்த வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தியுள்ளார்களாம்.

முக்கிய முடிவு சசிகலாவை சந்திக்க வேண்டும் என ஆதரவாளர்கள் கூறுவது பற்றி வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளோடு திங்கள்கிழமைக்கு மேல் ஆலோசனை நடத்தி ஓ.பன்னீர்செல்வம் முக்கிய முடிவு எடுப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.