பணப்பட்டுவாடா எதிரொலி: மதுரை தேர்தலை ரத்து செய்ய கோரிக்கை
மதுரை மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்ய கோரி கே.கே.ரமேஷ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பல தொகுதிகளில் பணப்பட்டுவாடா கனஜோராக நடப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் மதுரை தொகுதியில் சமுதாய வாரியாக அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்து வருவதால் இந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கே.கே.ரமேஷ் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது விரைவில் தெரிய வரும்
Leave a Reply
You must be logged in to post a comment.