நேற்றைய பேட்டியில் முக ஸ்டாலினை வெறுப்பேற்றிய ரஜினிகாந்த்: எப்படி தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று ’அண்ணாத்த’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு அவர் பேட்டி கொடுக்காமல் நேராக வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பின் வீட்டின் வாசலில் செய்தியாளர்களை சந்தித்து சில கருத்துக்களை கூறினார்
நேற்று அவர் கூறிய பேட்டியில் மத்திய அரசை கடுமையாக தாக்கியும், தான் பாஜக ஆள் இல்லை என்பதை உறுதி செய்து கூறினார். ரஜினியின் இந்த பேட்டியை கமலஹாசனே தனது டுவிட்டரில் பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விமான நிலையத்தில் பேட்டி அளிக்காமல் வீட்டின் கேட் முன் பேட்டி அளித்தது ஏன் என்பது குறித்த தகவல்கள் தற்போது வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேட்டை திறந்தால் சிலர் தலைப்புச் செய்தியாகி வருகிறார்கள் என்று திமுக முக ஸ்டாலின் அவர்கள் கூறினார். அதனால் அவரை வெறுப்பேற்றுதற்காகவே மீண்டும் கேட் அருகே அவர் பேட்டி கொடுத்ததாக தெரிகிறது
வெகு சிலருக்கு மட்டுமே புரிந்த இந்த விஷயம் புரிந்ததைடுத்து அவர்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.