shadow

நேற்று பெங்களூரில் 300 கார், இன்று சென்னையில் 200 கார் தீயில் நாசம்

நேற்று பெங்களூரில் விமானப்படையினர் கண்காட்சியை பார்வையிட வந்திருந்த பார்வையாளர்களின் 300 கார்கள் தீயில் எரிந்து சேதமடைந்த நிலையில் இன்று சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவ மனை எதிர்புறத்தில் அமைந்துள்ள கால் டாக்சி நிறுத்தப்பட்ட பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகி உள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

சம்பவம் அறிந்து தீயணைப்பு வீரர்கள் தீயை மேலும் பரவ விடாமல் அணைத்து வருகின்றனர். இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்

Leave a Reply