நேர்கொண்ட பார்வை: பிரேக் இல்லாமல் அஜித் நடிப்பது ஏன்?
தல அஜித்தின் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் தொடங்கி இடைவெளியின்றி நடந்து வருகிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்பதால் படப்பிடிப்பு பிரேக் இன்றி நடைபெற்று வருகிறது
இந்த படத்தின் படப்பிடிப்பை ஏப்ரலுக்குள் முடித்துவிட்டு மே மாதம் அஜித் வெளிநாடு செல்லவிருப்பதாகவும், அவர் திரும்பி வந்தவுடன் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும் மே 1ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் இல்லை என்பது மட்டும் உண்மையாக தெரிகிறது. அஜித், வித்யாபாலன், ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.