நெல்லை தம்பதியை தாக்கியவர்களில் ஒருவர் பஞ்சாயத்து தலைவரா? திடுக்கிடும் தகவல்
நெல்லையில் வயதான தம்பதியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் கொள்ளையர்கள் இருவரும் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவரான பெருமாள் என்பவர், பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி இந்த கொள்ளை வழக்கை விசாரணை செய்து வந்த காவல் ஆய்வாளரின் நெருங்கிய உறவினர்தான் இந்த பெருமாள் என்பதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை உயரதிகாரதிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் இன்னொருவர் பாலமுருகன் என்பதும் அவருடைய பின்னணி குறித்து போலீசார் விசாரணை செய்து கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.