நீட் தேவு எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவி பரிதாப மரணம்

நேற்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை தமிழக மாணவர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் எழுதினர். தேர்வு எழுதிய பல மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வு எளிதாக இருந்ததாக கருத்து கூறினர்.

இந்த நிலையில் நேற்று மதுரையில் நீட் நுழைவுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், பேருந்தில் ஊர் திரும்பிக்கொண்டு இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மாணவியின் மரணத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply