நிர்வாணமாக திரிந்த பிச்சைக்காரருக்கு உடை மாற்றிவிட்ட இரண்டு இளம்பெண்கள்

வட இந்தியாவில் உள்ள நகரில் கடும் வெயிலில் மனநிலை சரியில்லாத ஒரு பிச்சைக்காரர் கடுமையான வெயிலில் உடுத்துவதற்கு உடை கூட இன்றி நிர்வாணமாக அலைந்து கொண்டிருந்தார். அவரை பார்த்து அருவருப்பு அடைந்த பலர், அந்த நபர் பக்கமே செல்வதில்லை

ஆனால் அந்த வழியாக சென்ற இரண்டு பெண்கள் அவரை கவனித்து உடனே அருகில் இருந்த கடை ஒன்றில் புதிய ஆடை வாங்கியதோடு, அந்த ஆடையை அந்த நபருக்கு அணிந்தும்விட்டனர். மேலும் அந்த நபருக்கு சாப்பாடும் வாங்கி கொடுத்து விட்டு சென்றனர். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வெளிவந்து அந்த இரு பெண்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply