நிர்வாணமாக காதல் ஜோடியின் பிணங்கள் மீட்பு: உல்லாசத்திற்கு பின் தற்கொலையா?

சேலம் அருகே காரில் நிர்வாணமாக இருந்த காதல் ஜோடியின் பிணங்கள் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் செவ்வாபேட்டை பகுதியைச் சேர்ந்த கோபி என்பவரின் மகன் சுரேஷ் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பாததால், பல்வேறு இடங்களிலும் அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். இந்த நிலையில், கோபிக்கு சொந்தமான கார் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நிர்வாணமாக சுரேஷ் மற்றும் இளம்பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்குசென்று சடலத்தை கைப்பற்றிய போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண், அப்பகுதியைச் சேர்ந்த ரவின் என்பவரின் மகள் ஜோதிகா என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் காதலித்ததாகவும், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் தெரியவந்துள்ளது. அதனால் இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு இறுதியாக தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது மூச்சடைத்து உயிரிழந்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Leave a Reply