shadow

நிர்மலாதேவி விவகாரம்: கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகனிடம் சிபிசிஐடி விசாரணை

நிர்மலாதேவி விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட பேராசிரியர் முருகனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தலைமறைவாக இருக்கும் கருப்பசாமியும் விரைவில் போலீசாரிடம் சிக்குவார் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டால் தான் பேராசிரியை நிர்மலாதேவி கூறிய உயர் அதிகாரிகள் யார்-யார் என்பது தெரியவரும் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் மதுரை காமராஜர் பல்கலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் விவிஐபிக்கள் தங்கும்போது அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நிர்மலாதேவிதான் செய்து கொடுத்ததாகவும், அவருக்கு பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி உதவி செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Leave a Reply